உள்ளூர் செய்திகள் செய்திகள்

அநுராதபுரம் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர்

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (12) அநுராதபுரம் வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.

அண்மையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது, வைத்தியசாலையின் பணிப்பாளர், பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியக் குழுவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை, அநுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்

இன்று (12) நாடாளுமன்றத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபரை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன