உள்ளூர் செய்திகள் செய்திகள்

36,000 ஏக்கரில் தெங்குச் செய்கை திட்டம்

இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தெங்குச் செய்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

வடக்கு தெங்கு முக்கோண வலயத்தில் 16,000 ஏக்கரிலும் ஏனைய பகுதிகளில் 20,000 ஏக்கர் பயிரிட எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சரின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அமைச்சரினால் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தெங்குச் செய்கையை மேம்படுத்தும் நோக்கில் இந்த வருடத்தில் 2.5 மில்லியன் தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வருடத்தில் தெங்கு செய்கையின் ஊடாக 2,875 மில்லியன் தேய்காய்களை உற்பத்திச் செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் ஆலோசனைக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன