உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஆளும் கட்சிக்கு ஒரு நீதி எனக்கு ஒரு நீதியா? – மீண்டும் ஆக்ரோஷமடைந்த அர்ச்சுனா எம்.பி

ஆளும் கட்சிக்கு ஒரு நீதி எனக்கு ஒரு நீதியா என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினார்.

இன்றைய (05) நாடாளுமன்ற அமர்வில் தனது கருத்தை முன்வைக்க நேரம் வழங்கப்படாமை குறித்து கேள்வியெழுப்பும் சந்தர்ப்பத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“ஆளும் கட்சி முன்வைத்த கருத்து தொடர்பில் தனது கருத்தை தெரிவிப்பதாகக் கூறி இராமநாதன் அர்ச்சுனா ஒரு நிமிட நேரத்தை கோரியிருந்தார்.

அவருடைய கோரிக்கைக்கு ஏற்ப அவருக்கான ஒரு நிமிடம் வழங்கப்பட்டது எனினும், அவர் மற்றுமொரு கருத்தை முன்வைத்த காரணத்தினால் சபாநாயகர் அவரை மறுத்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,

“ ஆளும் கட்சிக்கு ஒரு நீதி, எனக்கு ஒரு நீதி. நீங்கள் என்னை இடையூறு செய்கிறீர்கள், மறுபடியும் எனக்கு ஒரு நிமிடம் தாருங்கள்.

ஏன் நீங்கள் எங்களுக்கான நேரத்தை ஒதுக்குவதில்லை. முக்கியமான ஒரு காரணத்தை முன்வைக்க நேரத்தை தாருங்கள்.

பக்க சார்பாக நடந்துக் கொள்ள வேண்டாம். ” எனத் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன