“காந்தா வியவசாய கத்வய துலின் கொடநகமுதே” (பெண்களின் சுயதொழில் முயற்சியாண்மை ஊடாகக் கட்டியெழுப்பப்படுபவை)” எனும் திட்டத்தின் கீழ் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் லிய சக்தி 2025 பெண்களின் உற்பத்தி கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை மார்ச் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மு.ப. 6 மணி முதல் பி.ப. 10 மணி வரை கொழும்பு 7 விகாரமகா தேவி வெளியரங்கில் நடைபெறும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பெண்களின் சுய தொழில் முயற்சியாண்மையின் உற்பத்தி மற்றும் சேவைகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் நுழையச் செய்யும் நோக்கில் இடம்பெறவுள்ள இந்த விற்பனைக் கண்காட்சியில் ஆடைகள், துணி வகைகள் மற்றும் பாதணிகள் உட்பட பல்வேறு உற்பத்திகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன.
Next article: புத்தளம் லன்சிகம கடற்கரையில் “Clean Sri Lanka” திட்டம் செயல்படுத்தப்படுகிறதுNext