உள்ளூர் செய்திகள் செய்திகள்

லிய சக்தி 2025 2025 பெண்களின் உற்பத்திக் கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை மார்ச் 5 – 6 ஆம் திகதிகளில் விகாரமகா தேவி வெளியரங்கில்

“காந்தா வியவசாய கத்வய துலின் கொடநகமுதே” (பெண்களின் சுயதொழில் முயற்சியாண்மை ஊடாகக் கட்டியெழுப்பப்படுபவை)” எனும் திட்டத்தின் கீழ் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் லிய சக்தி 2025 பெண்களின் உற்பத்தி கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை மார்ச் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மு.ப. 6 மணி முதல் பி.ப. 10 மணி வரை கொழும்பு 7 விகாரமகா தேவி வெளியரங்கில் நடைபெறும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பெண்களின் சுய தொழில் முயற்சியாண்மையின் உற்பத்தி மற்றும் சேவைகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் நுழையச் செய்யும் நோக்கில் இடம்பெறவுள்ள இந்த விற்பனைக் கண்காட்சியில் ஆடைகள், துணி வகைகள் மற்றும் பாதணிகள் உட்பட பல்வேறு உற்பத்திகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன.

Next article: புத்தளம் லன்சிகம கடற்கரையில் “Clean Sri Lanka” திட்டம் செயல்படுத்தப்படுகிறதுNext

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன