உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யானை ரயில் மோதலுக்கு தீர்வு வழங்க வேண்டும்

ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யானை ரயில் மோதலுக்கு தீர்வு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க பல வெற்றிகரமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்திய ரயில்வே கூட வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து ‘கவக்’ என்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

வெப்பநிலையை கண்கானிக்கும் கேமராக்கள் போன்றவைகளும் இங்கு பயன்படுத்தப்படுவதால் இதில் கவனம் செலுத்துங்கள்

மேலும் கென்யா போன்ற நாடுகளில் தூண்களுக்கு மேலால் செல்லும் ரயில் வழித்தடங்களும், சுரங்க ரயில் பாதைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கு மேலதிகமாக தேனீக்கூடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமும் இந்த ஆபத்துக்களை குறைக்க முடியும்” என்றார்.

எனவே, வனஜீவராசிகள் அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் ஒன்றிணைந்த முன்னெடுக்கும் வேலைத்திட்டமொன்றை நோக்கி செல்லுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன