உலகம் செய்திகள்

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லொறி வெடித்ததில் 18 பேர் உயிரிழப்பு

நைஜீரியா நாட்டிலுள்ள இனுகு மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பெட்ரோல் ஏற்றியபடி டேங்கர் லொறியொன்று வீதியில் சென்றுகொண்டிருந்தபோது இனுகு – ஒனிஸ்டா வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதியுள்ளது.

லொறி மோதிய வேகத்தில் பெட்ரோல் டேங்கர் லொறி தீப்பிடித்து வெடித்துச் சிதறியுள்ளது.

இதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்ததோடு, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன