உலகம் செய்திகள்

அமெரிக்காவில் 17 வாகனங்கள் மோதி அதிபயங்கர சாலை விபத்து – 5 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் பயங்கரமான சாலை விபத்து நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில், ஹோவர்ட் லேன் மற்றும் பார்மர் லேன் இடையே உள்ள சாலையில் 18 சக்கர டிரக் வாகனம் ஒன்று கார்கள் மீது மோதி தள்ளியதால் அவை ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்தது. மொத்தம் 17 வாகனங்கள் இந்த விபத்தில் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் வருகை 11.7 வீதத்தால் அதிகரிப்பு

2025ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் $768.2 மில்லியன் வருவாயை இலங்கை பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பெறப்பட்ட வருவாயான $687.5 மில்லியனுடன் ஒப்பிடும்போது இது 11.7 சதவீதம் அதிகரிப்பாகும். 2024 ஆம் ஆண்டில் $3.17 பில்லியன் வருவாயை இலங்கை சுற்றுலாத்துறை ஊடாக பெற்றது. அது 2023ஆம் ஆண்டில் பெற்றப்பட்ட வருவாயான $2.07 பில்லியனுடன் ஒப்பிடும்போது 53.2 சதவீதம் அதிகரிப்பாகும். இந்த ஆண்டின் முதல் 72 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஏப்ரலில் இலங்கை வரும் இந்திய பிரதமர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் சில நாட்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று (15) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்திய பிரதமரின் குறித்த இலங்கை விஜயத்தின் போது பல புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சாலி நளீமின் இராஜினாமா தொடர்பில் சபாநாயகர் அறிவிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சாலி நளீம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் இன்று (15) நாடாளுமன்றத்தில் சபைக்கு அறிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகரசபைக்கு போட்டியிடுவதற்காகவே தான் பதவி விலகுவதாக நேற்று (14) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையில் அவர் தெரிவித்தார். சாலி நளீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியலிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

தேசிய அபிவிருத்தியில் பெண்கள் பிரதிநிதித்துவத்திற்கு அதிக வாய்ப்பு

“இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், அவர்களின் பெறுமதியான பங்களிப்பு இருந்தபோதிலும், கட்டமைப்பு ரீதியான தடைகள் பொருளாதாரத்தில் அவர்களின் முழுமையான பங்களிப்பை மட்டுப்படுத்தியுள்ளன. வர்த்தகத் தலைவர்களாகவும், தொழில்முயற்சியாளர்களாகவும், ஏற்றுமதியாளர்களாகவும் பெண்கள் முன்னேறக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் இந்தத் தடைகளை அகற்ற எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) மற்றும் சர்வதேச வர்த்தக நிலையம் (ITC) இணைந்து […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

வானிலை முன்னறிவிப்பு நாட்டின் சில பகுதிகளில் மாலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம்

மேற்கு, சப்ரகமுவ, மத்தி, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் சில இடங்களில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்… மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் சாத்தியம் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

படலந்தை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

படலந்தை ஆணைக்குழுவின் அறிக்கை சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயகவினால் இன்று (14) பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஜனாதிபதி தலைமையில் அமைச்சரஓவையினால் இந்த பட்டலந்தை அறிக்கை தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு கொள்கைத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டதாகவும் அமைச்சர் விமல் ரத்நாயக்க இங்கு தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அறிக்கையை தொடர்பாக இரண்டு நாட்கள் விவாதிக்கப்படவுள்ளதாக சபை முதல்வர் மேலும் சுட்டிக்காட்டினார். ஆணைக்குழுவின் அறிக்கையை முன்வைத்த சபை முதல்வர் இங்கும் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்; தலைமறையின் மனசாட்சி கட்டுப்பத்தும் இந்த அறிக்கையை பாராளுமன்றத்திற்கு […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இலத்திரனியல் ஒலிபரப்பு மாநாடு இலங்கையில்

இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கம் மற்றும் ஊடக அமைச்சு இணைந்து ஒலிபரப்பு மாநாடொன்றை (Broadcasting Symposium) இலங்கையில் நடாத்துதல் தொடர்பான கலந்துரையாடல் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் மற்றும் இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் அண்மையில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த ஒலிபரப்பு மாநாடு துறை சார் தொழில் வல்லுனர்களுக்கு, ஊடகவியலாளர்களுக்கு, ஊடகத்துறை சவால்கள், பொறுப்புக்கள் மற்றும் எதிர்காலத்தை எதிர்பார்த்திருப்பவர்களுக்காக வாய்ப்பாக அமைவதுடன், நெறிமுறைகளுடனான ஊடகக் கலையின் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை இந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான வைத்தியர்; நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்க தகவல் திணைக்களத்தில் சமீபத்தில் (11) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை

விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை (மார்ச் 15) காலை 8.00 – 8.05 மணிக்கு நடைபெற உள்ளது. அன்று உங்கள் தோட்டம், விவசாய நிலம், பாடசாலை, வழிபாட்டுத் தலம் அல்லது நிறுவனத்தில் இருக்கும் குரங்குகள், அணில்கள் மற்றும் மயில்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தில் பதிவு செய்து உங்கள் பிரதேச கிராம அலுவலர் அல்லது பொருளாதார மேம்பாட்டு அலுவலர் அல்லது சமுர்த்தி மேம்பாட்டு அலுவலர் அல்லது […]