உள்ளூர் செய்திகள் செய்திகள்

கடலட்டை தொழிலை முன்னெடுப்பவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் கடலட்டை தொழிலை முன்னெடுப்பதிலுள்ள இடர்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் 14.03.2025 அன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில இடம்பெற்றது. ஏழை மீனவர் ஒருவர் கலட்டை பண்ணை ஆரம்பிப்பதற்கு விண்ணப்பித்தால் அதற்கு இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது. இதுவே வசதிபடைத்த ஒருவர் விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி வழங்கப்படுகின்றது. ஏன் ஏழை மீனவர்களை இவ்வாறு அலைக்கழிக்கின்றீர்கள்? ஏழைகளுக்கு ஒரு நடைமுறை, வசதிபடைத்தோருக்கு இன்னொரு நடைமுறையா?’ என ஆளுநர் கூட்டத்தின் ஆரம்பத்தில் திணைக்களத் தலைவர்களை நோக்கி […]

உள்ளூர் செய்திகள் கல்வி செய்திகள்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகின்றது. நாடளாவிய ரீதியாக 3,663 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு 474,147 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதுமாக 398,182 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 75,965 தனியார் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்கு என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவுறுத்தியுள்ளார். பரீட்சை […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் – அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை கோரும் காலக்கெடு இன்று நள்ளிரவுடன் நிறைவு

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பில் தகைமை பெற்ற விண்ணப்பதாரிகளிடம் இருந்து அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை கோரும் காலக்கெடு 2025 மார்ச் மாதம் 17 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு:

உள்ளூர் செய்திகள் செய்திகள்

உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் மார்ச் 20ஆம் திகதி பி.ப 6 மணி முதல் 8 மணிவரை – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம்

பாராளுமன்றத்தை ஏப்ரல் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூட்டுவதற்கும் தீர்மானம் பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த இரண்டு நாள் விவாதம் ஏப்ரல் 10ஆம் திகதி ஆரம்பம் உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை மார்ச் 20ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6 மணி முதல் 8 மணி வரை நடத்துவதற்கு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (15) கூடிய பாராளுமன்ற […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இராணுவத் தளபதி மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயம் இராணுவத் தளபதிக்கு மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பெறுப்புக்கள் மற்றும் கடமைகள் பற்றிய விளக்கத்தை பெற ஒரு வாய்ப்பை வழங்கியது. மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் இராணுவத் தளபதியை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் […]

பூனாகலையில் புதிய வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டல்

பண்டாரவளை, பூனாகலையில் புதிய வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 15 அன்று கலந்து கொண்டார். பெருந்தோட்டதுறை மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, இலங்கை இராணுவத்தின் 11 வது பொறியியல் சேவை படையணி படையினரால் முன்னெடுக்கப்படுகின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவால் இடம்பெயர்ந்த 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். முதல் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை: திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இன்றைய வானிலை அறிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் […]

ஆன்மிகம்

காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவர் குருபூசை தின நிகழ்வு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் திருகோணமலை மாவட்ட செயலகம், திருகோணமலை மாவட்ட அறநெறிகள் சங்கம் இணைந்து நடாத்திய காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவர் குருபூசை தின நிகழ்வு நேற்று (15) திருகோணமலை விஸ்வநாத சுவாமி (சிவன்) ஆலய அன்னதான மண்டபத்தில் இடம்பெற்றது. இரெட்ணசிங்க பிள்ளையார் ஆலயத்தில் இருந்து காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவரின் திருவுருவப் படங்களை தாங்கியவாறு ஆரம்பமான மாபெரும் ஆன்மீக ஊர்வலம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம், முத்துக்குமாரசுவாமி ஆலயம் ஊடாக விஸ்வநாத […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பொருளாதார முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் மற்றும் சர்வதேச வர்த்தக மையத்தின் (ITC) நிறைவேற்றுப் பணிப்பாளருக்கு இடையில் சந்திப்பு

சர்வதேச வர்த்தக மையத்தின் (ITC) நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி பமீலா ரோஸ்மேரி கோக்-ஹமில்டன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று மார்ச் 12ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில், டிஜிட்டல் பரிவர்த்தனை, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் அபிவிருத்தி மற்றும் பெண்களின் பொருளாதார வலுவூட்டல் உள்ளிட்ட முக்கிய பொருளாதார முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், டிஜிட்டல் மயமாக்கல், சந்தை அணுகலை வலுப்படுத்துதல் மற்றும் நிறுவன கட்டமைப்பின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் […]