உலகம் உள்ளூர் செய்திகள்

தேங்காயை இறக்குமதி செய்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

தேங்காய் இறக்குமதி செய்வது தொடர்பாக எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். இதன் போது தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர்; உற்பத்தித் திறனை அதிகரிக்காது எவ்வித கைத்தொழிலுக்கும் எதிர்காலத்தில் செல்ல முடியாது. அரிசி மற்றும் தேங்காய் பிரச்சினைகள் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படாமையினால் தான் ஏற்பட்டது. […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இலங்கையில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கி பிரதிநிதிகள் இலங்கை பிரதமருடன் கலந்துரையாடல்

உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தின் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய விடயங்கள், நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் தேசிய சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கான தேவைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது. தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சி ஊடாக (TVET) தரமான கல்வி அணுகலை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடலின் […]

உலகம் செய்திகள்

CResMPA திட்டம் குறித்து கலந்துரையாட உலக வங்கி பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் சந்திப்பு

உலக வங்கியின் பிராந்திய நாட்டு இயக்குநர் (மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை) டேவிட் சிஸ்லன் தலைமையிலான உலக வங்கி தூதுக்குழு குழு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) திங்கட்கிழமை (ஜனவரி 20) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தது. இலங்கையில் காலநிலை மீள்தன்மை பல கட்ட திட்ட அணுகுமுறை (CResMPA) திட்டம் தொடர்பில் உள்ள சவால்களை எதிர்கொள்வது மற்றும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உத்திகளைப் பற்றி, குறிப்பாக நீண்டகால திட்ட மேலாண்மை சவால்களை […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கு தீர்மானம்

2019 ஆம் ஆண்டில் க.பொ.த (உயர்தரம்) பெறுபேறுகளின் அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் முதலாவது மருத்துவக்கற்கை மாணவர் அணியினருக்கான மருத்துவமனை உள்ளக சிகிச்சைப் பயிற்சிகள் 2025 யூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. தெற்காசிய தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ நிறுவகத்தில் (SAITM ) காணப்படுகின்ற வசதிகளைப் பயன்படுத்தி மொரட்டுவைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கு மற்றும் மருத்துவக்கற்கை மாணவர்களின் மருத்துவமனை உள்ளக சிகிச்சைப் பயிற்சிக்காக மருத்துவர் நெவில் பெர்னாந்து மருத்துவமனையின் வசதிகளைப் பயன்படுத்துவதற்கும் இதற்கு முன்னர் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பொலன்னறுவை மட்டக்களப்பு பிரதான வீதி இன்று (21) காலை 7.00 மணிக்குப் பின்னர் சகல கனரக வாகனங்களுக்காக மாத்திரம் திறக்கப்பட்டது

பொலன்னறுவை மட்டக்களப்பு பிரதான வீதியின் (கல்லேல்லயிலிருந்து மன்னம்பிட்டி வரையான வீதி) இன்று (21) காலை 7.00 மணிக்குப் பின்னர் சகல கனரக வாகனங்களுக்காக மாத்திரம் திறந்துவிடப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

உலகம் செய்திகள்

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் அவர் இப்போது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். இதனடிப்படையில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள கேபிடோலின் உள்ளரங்கில் பதவியேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றிந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது. பதவியேற்பு விழாவில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள், உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். டிரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் மத்திய […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

21 வது காலாட் படைப்பிரிவினரால் ஹொரவபொத்தானையில் வெள்ள நிவாரணம் பணிகள்

21 வது காலாட் படை படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சீகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிஎபீஎம் பாலசூரிய ஆர்எஸ்பீ அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ், 4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர், சீரற்ற காலநிலையால் சிறிதளவு சேதமடைந்த கல்குளம் மஹானொச்சிகுளம் குள கரையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கை மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி உடனடியாக தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும், ஹொரவ்பொத்தானையில் […]

உலகம் செய்திகள்

இலங்கை மற்றும் மாலைதீவு கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் எண்ணெய் கசிவு மீட்பு பயிட்சியை நிறைவு செய்தனர்

இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் (SLCG) ஒன்பது (09) உட்பட பத்து (10) இலங்கை அதிகாரிகள், மாலத்தீவு கடலோர பாதுகாப்பு படை மற்றும் மாலத்தீவு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் பங்கேற்பாளர்களுடன் IMO நிலை 1 மற்றும் நிலை 2 பயிற்சியை வெற்றிகரமாக முடித்தனர். கூட்டு இயற்கை பாதுகாப்பு குழு (JNCC) வுடன் இணைந்து அம்பிபார் (Ambipar) ஏற்பாடு செய்த இந்த பயிற்சிக்கு சமுத்திர நாட்டு கூட்டாண்மை திட்டம் (OCPP) நிதியுதவி அளித்ததாக SLCG ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை

மழை நிலைமை: திருகோணமலையிலிருந்து பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாககாலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் […]