உள்ளூர் செய்திகள் செய்திகள்

அவிசாவளையிலிருந்து கஹவத்தை வரையான புகையிரதப் பாதை நிருமாணத்திற்கு அரசாங்கத்தின் உடனடி அவதானம்

அவிசாவளையிலிருந்து கஹவத்தை வரையான புகையிரத பாதையை நிருமாணிப்பதற்கு புதிய அரசாங்கத்தின் உடனடி அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களத்தின் பிரதி பிரதான பொறியியலாளர் (பாதை) பி.ஜே. பிரேமதிலக தெரிவித்தார். நேற்று (13) இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த புகையிரதப் பாதையில் முதலாவது கட்டமாக அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி வரை, இரண்டாம் கட்டமாக இரத்தினபுரியிலிருந்து கஹவத்தை வரையும், மூன்றாம் கட்டமாக எம்பிலிபிட்டிய, சூரியவெவ, மத்தளை ஊடாக […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2025 பெப்ரவரி 14 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 பெப்ரவரி 14 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அதிகாலை வேளையில் குளிரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

விமான நிலையத்தில் மாற்றப்பட்ட பயணப் பொதி – பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போதைப்பொருள்

சிகிரியா பொலிஸாரிடம் 23 கிலோ கிராமிற்கும் அதிமான குஷ் போதைப்பொருள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து பெண் ஒருவரால் இந்த போதைப்பொருள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் அந்த பெண்ணின் பயணப் பொதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நேற்றைய தினம் சிகிரியாவிற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் இன்று காலை பொலிஸாரிடம் போதைப்பொருளை ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கௌரவ பிரதமர் தலைமையில் எதிர்காலத் செயற்திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடியது

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் 2025.02.07ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. மாகாண மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25%ஆக வரும் வகையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, எதிர்வரும் தேர்தலில் அந்த முன்மொழிவை செயற்படுத்தும் வகையில் தற்பொழுது காணப்படும் சட்டத்தில் […]

செய்திகள் விளையாட்டு

உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் இலங்கை இராணுவ தடகள வீரர் பாலித பண்டாரவிற்கு தங்கப் பதக்கம்

உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் இலங்கை இராணுவ தடகள வீரர் பாலித பண்டாரவிற்கு தங்கப் பதக்கம் இலங்கை இராணுவ தடகள வீரரான பணிநிலை சார்ஜன் எச்.ஜி. பாலித பண்டார அவர்கள் 2025 பெப்ரவரி 11 அன்று துபாயில் நடைபெற்ற உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் குண்டு எறிதல் (எப்42) போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அவரது சிறந்த செயல்திறன் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதுடன், இது இலங்கையின் […]

உலகம் செய்திகள்

சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தால் 5 வருட சிறை தண்டனை

வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் பட்சத்தில் அவர்களுக்கு ஐந்து வருடங்கள் சிறை தண்டனையும் ரூபாய் 5 இலட்சம் அபராதமும் விதிக்கும் சட்ட மசோதாவை மத்திய அரச கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான், மியன்மார், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாட்டினர் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உட்பட இந்தியர்களுக்கான ஆவணங்களையும் போலியாக பெற்று வருகின்றனர். இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதால் இதனை தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, பாஸ்போர்ட் விசா போன்று எந்த […]

உலகம் செய்திகள்

ஈரானுக்கு எதிரான போருக்கு தயாராகும் இஸ்ரேல்?

ஈரானின் அணு ஆயுத நிலையங்களைத் தாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிக் காலத்தில், இதுபோன்ற சாத்தியக்கூறுகள் குறித்து உளவுத்துறை நிறுவனங்கள் ஒரு அறிக்கையை சமர்ப்பித்ததாக வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானிய இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதும், ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவின் சக்தி குறைந்து வருவதும் மத்திய ஆசியாவில் ஸ்திரமின்மை அதிகரிக்க பங்களித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸாரின் அறிவிப்பு

காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு பிரசாரத்தை வெளியிட்டுள்ளனர். உலகளாவிய ரீதியில் நாளை (14) காதலர் தினத்தை முன்னிட்டு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸாரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ‘காதலர் தினத்திற்கு முன்’ என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பில், “நீ ஒரு பெண்ணாக இருந்தால், காதலர் தினத்தன்று, அதனை கொண்டாட பாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்வதற்கு முன், உன் பெற்றோர் உனக்குக் கொடுத்த விலைமதிப்பற்ற வாழ்க்கையைப் பற்றி இருமுறை யோசி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாடு முழுவதும் இன்றும் மின் துண்டிப்பு

நாடு முழுவதும் இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மின்சார உற்பத்தி குறைவாக உள்ள நேரங்களில் அமைப்பை நிர்வகிக்க இந்த மின்வெட்டு மேற்கொள்ளப்படுவதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் மின்வெட்டை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார். இலங்கை மின்சார சபை 2025 பெப்ரவரி 13 ஆம் திகதி இன்று நான்கு பிரிவுகளின் கீழ் நாடு முழுவதும் மின்வெட்டு […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இந்தியாவில் கைது

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், நேற்று (12) இந்தியாவில் தமிழ்நாடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இருந்து சென்னைக்கு பயணம் செய்த முன்னாள் எம்.பி., கேரளாவின் கொச்சியில், பிரிதொரு கடவுச்சீட்டை பயன்படுத்தி அங்கிருந்து ஐரோப்பிய நாட்டிற்குச் செல்ல முயன்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு பயணம் செய்வதற்காக அவர் வழங்கிய கடவுச்சீட்டுடன் கூடுதலாக, அவரிடம் மற்றொரு கடவுச்சீட்டு இருந்ததாகவும், அந்த கடவுச்சீட்டை […]