உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஆனந்த சுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலைசெய்க – ரவிகரன் எம்.பி

நீண்டாகாலமாக விடுதலையின்றி சிறைகளில் வாடும் ஆனந்தசுதாகர் உள்ளிட்ட தமிழ் அரசியல்கைதிகளை உடனடியாக விடுதலைசெய்யுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (01.03.2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாடு அமைச்சிற்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் பலரும் விடுதலையின்றி நீண்டகாலமாக சிறையில் வாடுகின்றனர். குறிப்பாக கிளிநொச்சி, மருதநகரை சேர்ந்த ஆனந்தசுதாகர் என்பவர் கடந்த 2008ம் ஆண்டு பயங்கரவாத தடை […]

உலகம் செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதிக்கு வலுக்கும் ஆதரவுகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மோதலுக்குப் பின்னர் உக்ரேனிய ஜனாதிபதி செலென்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக உக்ரேனுக்கு நிதியுதவியை அதிகரிக்க நோர்வே திட்டமிட்டு வருகிறது. உக்ரேனுக்கான நிதியுதவிக்காக நாடாளுமன்றத்தில் அரசாங்கம் கோரிக்கை விடுக்கும் என நோர்வே பிரதமர் தெரிவித்துள்ளார். இதனிடையே லண்டனில் ஐரோப்பிய தலைவர்களையும் உக்ரேனிய ஜனாதிபதி செலென்ஸ்கியையும் நோர்வே பிரதமர் ஸ்டோயர் இன்று ஞாயிற்றுக் கிழமை சந்திக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆன்மிகம்

புனித ரமலான் நோன்பு இன்று முதல் ஆரம்பம்

புனித ரமலான் நோன்பு காலம் இன்று (02) தொடங்குகிறது. அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (01) இரவு பிறை தென்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முகமது முனீர் தெரிவித்தார்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

தேங்காய் விலை குறைவு

சந்தையில் கடந்த வாரத்தை விட தேங்காய் விலை படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் 250 ரூபாவாக இருந்த தேங்காய் ஒன்றின் விலை தற்போது 200 ரூபா முதல் 220 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், சீரற்ற காலநிலை காரணமாக எதிர்காலத்தில் தேங்காய் விலை குறித்து உறுதியான அறிவிப்பை வெளியிட முடியாது என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நான்காவது தவணை இலங்கைக்கு கிடைக்கும்

சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணை இலங்கைக்கு கிடைக்கும் என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார் இன்று (01) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார். கடன் விரிவாக்கல் வசதியின் கீழ் இலங்கைக்காக மேலும் ஒரு தவணையை அங்கீகரிப்பதற்கு நேற்று கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை தீர்மானித்ததாகவும், 344 மில்லியன் அமெரிக்க […]

செய்திகள் விளையாட்டு

மழையால் கைவிடப்பட்ட போட்டி அவுஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்து முதலில் விளையாடியது. இருவர் அரைசதம் ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் களமிறங்கினர். ரஹ்மனுல்லா குர்பாஸ் 0 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

மூதூரில் வாகன விபத்து – 33 பேர் வைத்தியசாலையில்

மூதூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 33 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மினுவாங்கொடையிலிருந்து சேருவாவில பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்குச் செல்வதற்காக யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 33 பேரில் 18 பேர் பெண்கள் என தெரிவிக்கப்படுகிறது.

உலகம் செய்திகள்

ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு வடகொரியா அனுமதி

பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மீண்டும் 5 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது. ஆனால், சுற்றுலா வருபவர்களுடன் உள்ளூர் வழிகாட்டி இருக்க வேண்டும், தடை செய்யப்பட்ட இடங்களில் புகைப்படங்கள் எடுக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு ரஷ்யாவின் 100 சுற்றுலாப் பயணிகளுக்கு வடகொரியா அனுமதி அளித்தது. தொடர்ந்து, சீனாவின் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தாண்டு […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாடாளுமன்றில் பொய் கூறும் எம்.பிகள் – நாமல் முன்வைக்கும் புதிய யோசனை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் காப்பீடு ரத்து செய்யப்பட்டதைப் போன்று நாடாளுமன்றத்தில் பொய் சொல்வதை ரத்து செய்ய வேண்டும் என பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்களைப் பற்றி பல்வேறு பொய்களைச் சொல்கின்றனர். நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் எம்.பி.க்கள் ஒளிந்துகொண்டு பொதுமக்களை தவறாக வழிநடத்துவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சமயப் பாடங்களைக் கற்பிப்பதற்குக் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை

சமயப் பாடங்களை கற்பதற்காகக் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கல்விக் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் போதனா விஞ்ஞான டிப்ளோமாதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2025 மார்ச் மாதம் கல்விக் கல்லூரிகளில் இருந்து வெளியாகும் போதனா விஞ்ஞான டிப்ளோமாதாரிகளுக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை ஒதுக்கி வைக்க வேண்டி ஏற்படுவதனால் சமயப் பாடங்களில் (தர்மாச்சார்ய) சித்தியடைந்த இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக 2019 […]