பஞ்சாங்கம்

சிம்மத்துக்கு செல்லும் கேது…இனி இவர்களுக்கு ராஜ வாழ்க்கை தான்

விதிகளை மாற்றக்கூடிய சக்தி கொண்ட கேது மே மாதத்தில் தைரியத்தின் ராசியான சிம்ம ராசிக்கு மாறுகிறார். இது பலரின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தப் போகிறது. அதன்படி இந்த ராசி மாற்றத்தால் 2025 இல் அதிர்ஷ்டக்காரர்களாகப் போகும் ராசிக்காரர்கள் யாரெனப் பார்ப்போம். மேஷம் தொழிலில் மிகப்பெரிய வெற்றி கிட்டும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். புதிய யோசனைகள் தோன்றும். ஆபத்தான முயற்சிகள் உங்கள் தலையெழுத்தை மாற்றும். மிதுனம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தடைகள் விலகும். பணியிடத்தில் […]

செய்திகள்

நடுவர்களை கடலுக்கே அழைத்துச் சென்ற திவினேஷின் பாடல்

ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் performance சுற்றில் திவினேஷ் பாடிய பாடலுக்கு நடுவர்கள் நால்வரும் எழுந்து மேடைக்கே வந்துவிட்டனர். அதற்கான ப்ரமோ…

செய்திகள் விளையாட்டு

இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி விளையாடுவது சந்தேகம்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை (மார்ச் 9-ஆம் திகதி) ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து- இந்தியா பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. அரையிறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிராக நியூசிலாந்து விளையாடும்போது, தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் கிளாசன் அடித்த பந்தை நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி டைவ் அடித்து கேட்ச் பிடிக்கும் அவரது வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இறுதிப் போட்டிக்கு ஐந்து நாட்கள் இருப்பதால் காயம் சரியாகிவிடும் […]

செய்திகள் விளையாட்டு

விராட் கோலி குடிக்கும் கருப்பு தண்ணீர் விலை என்ன? கருப்பாக இருக்குமா?

விராட் கோலி, புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர். கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் விராட் கோலியின் ரசிகராகவும் இருப்பார்கள், இருந்திருப்பார்கள். இப்போது அதிகம் பேசப்படுவது அவர் குடிக்கும் கருப்பு தண்ணீர்தான். கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இவரது ஃபேன் கிளப்பில் மெம்பர்களாகவும் இருக்கிறார்கள். குறிப்பாக, இவர் தனது உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்துபவர் என்பதும் பலருக்கும் தெரியும். அதில் ஒன்றாக, அவர் கருப்பு தண்ணீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். எப்போதும் பிரான்ஸிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கருப்பு தண்ணீர் எனப்படும் […]

சினிமா

‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது

அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் சிக்னேச்சர் புரடக்ஷ்ன்ஸ் மற்றும் ஜி.எஸ் சினிமா இன்டர்நெஷனல் இணைந்த தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நிறம் மாறும் உலகில். இப் படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, ரியோஈ சாண்டி ஆகியோர் நடித்துள்ளனர். நான்கு விதமான கதைகளை இணைக்கும் விதமாக இப் படம் அமைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் மூன்றாவது பாடலான ஆழி வெளியாகியுள்ளது.

உலகம் செய்திகள்

மும்பை தாக்குதல் குற்றவாளியை நாடு கடத்தும் விவகாரம் ; அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளியான தஹவூர் ராணா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த அமெரிக்க உச்சநீதிமன்றம் ராணாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. முன்னதாக நாடு கடத்தப்பட்டால், இந்தியாவில் விசாரணையை எதிர்கொள்ளும் அளவுக்கு நீண்ட நாட்கள் உயிர்வாழ முடியாது என்று ராணா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். மேலும், இந்தியாவில் டார்ச்சர் செய்யப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். நாடு கடத்துவதற்கு தடை விதிக்காத […]

உலகம் செய்திகள்

மீண்டும் வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் ராக்கெட் – விமான சேவைகள் முடக்கம்!

தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த ராக்கெட் வெடித்துச் சிதறியதையடுத்து, அதன் பாகங்கள் எரிந்து கொண்டு விண்ணில் இருந்து விழுந்ததால் விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. முன்னதாக கடந்த ஜனவரி 16 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் 7 ராக்கெட் வெடித்துச் சிதறிய நிலையில், ஸ்டார்ஷிப் 8-ஐ உள்ளூர் நேரப்படி (அமெரிக்கா) கடந்த வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு தெற்கு டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சஜித் பிரேமதாசவின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி

வலுவூட்டப்பட்ட பெண்களால் நிறைந்த அழகான இலங்கைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இந்த உயரிய பொறுப்பிற்காக எந்த நேரத்திலும் தேவையான பங்களிப்பையும் உந்து சக்தியையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவரது வாழ்த்துச் செய்தியில், “ஒரு தாய், மனைவி, சகோதரி, மகள் மற்றும் நண்பி போன்ற பல்வேறு வகிபாகங்களின் பிரதிநிதியாக இருக்கும் பெண், ஒரு நாட்டின், சமூகத்தின் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் – மக்கள் போராட்ட முன்னணி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்து, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அல்ஜஷீராவுக்கு கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டதா? […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

வாகன இறக்குமதியாளர்களுக்கான நிபந்தனைகள்

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 25 வீதமானவை ஆறு மாதங்களுக்குள் பதிவுசெய்யப்படாவிட்டால் இறக்குமதிக்கான அனுமதி இரத்துச் செய்யப்படும் என்று அரசாங்க நிதி பற்றிய குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு அமைய வழங்கப்பட்டிருப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் வளமைக்குத் திரும்பச் செய்யும் நோக்கிலும், நாட்டின் பொருளாதார நிலைப்புத் தன்மையைப் பாதுகாத்து மேம்படுத்துதல், அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாக்கும் அதேநேரம், தேவையற்ற வாகன […]