உள்ளூர் செய்திகள் செய்திகள்

கொடவில நீச்சல் தடாகம் (50 மீட்டர்) மற்றும் விளையாட்டு மைதானத்தை பாடசாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு வழங்கும் திட்டம்

கொடவில நீச்சல் தடாகம் (50 மீட்டர்) மற்றும் விளையாட்டு மைதானத்தை எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சி வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காலியில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்ட தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு பகுதி போட்டிகளை கொட்டவிளவில் நடாத்துவதற்கு அண்மையில் (06.03.2025) அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி உட்பட்ட குழுவினர் மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டது.

செய்திகள் விளையாட்டு

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் – இன்று இறுதிப் போட்டி

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி இன்று (09) நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 2:30 மணிக்கு துபாயில் தொடங்கும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது இரண்டாவது முறையாகும். இரு அணிகளும் முன்னர் 2000ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தன. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றிருந்தது. இதேவேளை, இவ்விரு அணிகளுக்கும் இடையில் இதுவரை 119 ஒருநாள் போட்டிகள் […]

உலகம் செய்திகள்

சிரியாவில் வன்முறை – இரண்டு நாட்களில் 1000 பேர் பலி, நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள்

சிரியாவில் நடந்த மிக மோசமான வன்முறை சம்பவங்களில் ஒன்றில், பாதுகாப்புப் படையினருக்கும் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் விசுவாசிகளுக்கும் இடையிலான மோதல்களில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி அசாத்துக்கு விசுவாசமான அலவைட் சிறுபான்மை பிரிவினருக்கு எதிராக தற்போதைய அரசாங்கத்திற்கு விசுவாசமான துப்பாக்கிதாரிகள் கடந்த வியாழக்கிழமை வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வன்முறை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளதாகவும், பெரும்பாலான பகுதிகளை அரசாங்கம் மீண்டும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

28 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய 28 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான எச்.என்.அசங்க, ஜி.ஏ.பி.குணதிலக்க, கே.கே.குணசேகர, ஆர்.பி.அமரசிங்க மற்றும் ஆர்.எச்.பி.குணசேகர ஆகியோருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் கடமைகளை உள்ளடக்குவதற்காக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான என்.என்.எஸ்.மென்டிஸ், டபிள்யூ.பி.ஜே சேனாதீர, எம்.எம்.ஏ.பி மஹகிரில்ல மற்றும் எம்.யு.பி.களுபஹன ஆகியோர் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

மித்தெனிய முக்கொலை சம்பவம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது

மித்தெனிய முக்கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குட்டிகல-பதலங்கல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் குட்டிகல-பதலங்கல பகுதியைச் சேர்ந்த 39 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தம் 18 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்த அருண விதானகமகே அவரது மகன் மற்றும் மகள் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான நிலையில் உயிரிழந்தனர். இந்த கொலை தொடர்பில் தற்போது வரை 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

கம்பஹாவில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் காயம்

கம்பஹா, கிரிந்திவிட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர் கடையொன்றிற்குள் இருந்த குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதன்போது, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

உயிர்வாழ்வதற்கான போர்க்களம் “அதிகரித்து வரும் யானை- மனித மோதல்”

அடர்ந்த காடுகள் மற்றும் பரந்த வயல்வெளிகளின் மத்தியில், மிகப்பெரிய போராட்டமொன்று இடம்பெற்றுக்கொண்டுள்ளது. இது உயிர் வாழ்விற்கும் சகவாழ்விற்கும் இடையிலான போராட்டமாகும். மனித விரிவாக்கம் மற்றும் நில அபகரிப்பு, வாழ்வியல் காரணங்களினால், யானைகளின் வாழ்விடங்களை மற்றும் அவற்றின் பண்டைய பாதைகளை ஆக்கிரமிப்பதால் அவை விளிம்பிற்கு தள்ளப்படுகின்றன. ஒரு காலத்தில் மனிதர்களால் போற்றப்பட்ட அவை, இப்போது விவசாயிகள் மற்றும் சமூகங்கள் தமது வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போராடும் போராட்டத்தை எதிர்கொள்கின்றன. ஆனால் இது உண்மையிலேயே ஒரு மோதலா,அல்லது இயற்கையும் மனிதகுலமும் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

யாழில். பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வீட்டினுள் இரவு நுழைத்தமை – யூடியூப்பாருக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று, அதன் ஊடாக உதவி செய்வது போன்றன காணொளிகளை தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றி வந்துள்ளார். தேவை தேவைப்படுவோரிடம் நக்கல், நையாண்டியோடு பேசியே காணொளி எடுத்து பதிவிட்டு வருபவர். அதற்கு பல்வேறு […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

குறைந்த விலையில் புதிய வகை மதுபானம் இலங்கையில் அறிமுகம்

சட்டவிரோத மதுபான பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் குறைந்த விலையில் புதிய வகை மதுபானத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கலால் துறை தெரிவித்துள்ளது. அரசாங்க நிதி தொடர்பான குழுவின் சமீபத்திய கூட்டத்தில், மதுவரி ஆணையர் ஜெனரல் உதய குமார, மதுபானத்தின் விலை அதிகரிப்பு காரணமாக, பலர் சட்டவிரோத மதுபானங்களை உட்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார். இதனால் அரசாங்கத்திற்கு வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலையைத் தடுக்க குறைந்த விலையில் மதுபான போத்தலை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “மக்கள் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நவீன உபகரணங்கள் மற்றும் வசதிகளுடன் மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளம் இம்மாதம் 26ஆம் திகதி மக்கள் பாவனைக்கு

ஆனையிறவு உப்பளத்தை அண்மையில் திறக்கவுள்ளதால், அதன் செயற்பாடுகளுக்கான மதிப்பீட்டுப் பணிகளில் நேற்று (07) கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இணைந்து கொண்டார். இவ்வளவு காலமும் குறைபாடுகளுடன் செயற்பட்ட அரசாங்கத்தின் தொழிற்சாலைகளில் உப்பு உற்பத்தியின் போது அயடின் சேர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் வசதிகளுடனான நவீன மயப்படுத்தப்பட்ட இத்தொழிற்சாலை ஊடாக 26ஆம் திகதியில் இருந்து நுகர்விற்காக உப்பு சந்தைக்கு அனுப்பப்படும்.