உள்ளூர் செய்திகள் செய்திகள்

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் அதிகாரிகள் கருத்துக்களை முன்வைக்கத் தயாராக வராமை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதிருப்தி

தயாராக வருமாறு கூறி அறிவுறுத்தி அதிகாரிகள் திருப்பியனுப்பப்பட்டனர் மோட்டார் வாகனத் திணைக்களம் குழுவின் முன்னிலையில் கருத்துக்களை முன்வைப்பதற்கு உரிய தயார்ப்படுத்தல்களுடன் வராமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. இதற்கு அமைய மீண்டுமொரு தினத்திற்கு உரிய தயார்ப்படுத்தல்களுடன் வருமாறு கூறி அதிகாரிகள் திருப்பியனுப்பப்பட்டனர். மோட்டார் வாகனத் திணைக்களத்தின் 2020, 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து கலந்துரையாடுவதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

வனவிலங்குகளை கணக்கெடுப்பதற்கான விசேட செயல்பாட்டு அறை

மார்ச் 15 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் காலை 8.05 மணி வரை நாடு பூராகசவும் நடைபெறவுள்ள வனவிலங்கு கணக்கெடுப்பை மிகவும் துல்லியமாகவும் திறமையாகவும் நடத்தும் நோக்கில் கமத்தொழில் அமைச்சின் வளாகத்தில் ஒரு செயல்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது. கால்நடை கணக்கெடுப்பின் போது ஏற்படக்கூடிய ஏதேனும் சிக்கல்கள் குறித்து விசாரிக்க இந்த செயல்பாட்டு அறை நேற்று (11) முதல் 15 ஆம் திகதி வரை செயல்படும் என்று கமத்தொழில், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

09 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சுங்க அதிகாரி உட்பட மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 09 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சுங்க அதிகாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலதிபர் ஒருவரும் அவரது உதவியாளர் ஒருவரும் துபாயிலிருந்து சிகரெட்டுகளை கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் சிகரெட்டுகளுடன் விமான நிலையத்திலிருந்து வெளியேற முயற்சித்ததாகவும் பின்னர் சுங்க அதிகாரி தனது அடையாள அட்டையுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்து சிகரெட்டுகளை வெளியே எடுத்துச் செல்ல முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் , விமான நிலைய […]

சினிமா

மீண்டும் இணையும் ரஜினி – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி

வேட்டையன் திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இப்படம் ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி அல்லது தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ரஜினியின் அடுத்த திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளதாகவும் வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2019 ஆம் ஆண்டில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

அநுராதபுரம் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர்

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (12) அநுராதபுரம் வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார். அண்மையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது, வைத்தியசாலையின் பணிப்பாளர், பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியக் குழுவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதேவேளை, அநுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் […]

உலகம் செய்திகள்

பாகிஸ்தானில் ரயிலை கடத்திய பலுசிஸ்தான் சுதந்திரப் போராளிகள்

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டாவில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தின் பெஷாவர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர். பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் (BLA) என்ற பிரிவினைவாத அமைப்பு இந்த கடத்தலை அரங்கேற்றியது. ரயில் பிரு குன்றி மலைப்பகுதியின் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

அனுராதபுர போதனா வைத்தியசாலையில் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பான சந்தேக நபர் கைது

அனுராதபுர போதுனா வைத்தியசாலையில் இடம்பெற்ற துஷ்பிரயோக சம்பவம் தொடர்பான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நேற்று முன்தினம் (11) அனுராதபுர போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் எதிர்கொண்ட சம்பவம் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் விளக்கமறியலில் இருந்து விடுதலைப் பெற்றவர் என தகவல்

அநுராதபுரம் வைத்தியசாலையில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் அடையாளம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிரிபண்டலாகே நிலந்த மதுரங்க ரத்நாயக்க என்ற கல்னேவ, நவநகரப் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த சந்தேக நபர் நேற்று முன்தினம் மற்றுமொரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் இருந்து விடுதலைப் பெற்று வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. 34 […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள்

குறைந்த வருமானம் பெறும் 200,000 குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு குடும்பத்திற்கு 02 தென்னங்கன்றுகள் என்ற அடிப்படையில் 400,000 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்தார். மேலம் இந்த வருடம் 25 லட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

தையிட்டி விகாரை தொடர்பில் நியாயமான தீர்வு – அரசாங்கம் உறுதி

இனங்களுக்கிடையில் சுமுகத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய தலையீட்டை மேற்கொள்ளும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார். யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள தையிட்டி விகாரை தொடர்பில் குழுவில் வினவப்பட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். குறித்த இடத்திற்கு விஜயம் செய்து அதனைப் பார்வையிடுவதாகவும், இதுவிடயத்தில் நியாயமான முறையில் தலையிட முடியும் என நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பத்தாவது பாராளுமன்றத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் […]